ஆப்நகரம்

முதுகலை மருத்துவப்படிப்பில் சேர புதிய விதிமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களுடன், அனுபவத்திற்கான மதிப்பெண்கள் வழங்குவதற்கு புதிய விதிமுறையை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Feb 2018, 3:47 pm
தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களுடன், அனுபவத்திற்கான மதிப்பெண்கள் வழங்குவதற்கு புதிய விதிமுறையை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Samayam Tamil new post graduate medical education regulations in tamilnadu
முதுகலை மருத்துவப்படிப்பில் சேர புதிய விதிமுறை அறிவிப்பு!


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில், 1,585 முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் உள்ளன. இவற்றில் 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும். முதுகலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு அனுபவத்திற்கான மதிப்பெண்கள் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வி இயக்கம் மதிப்பெண்கள் வழங்குவதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் 1,200 மதிப்பெண்கள் ஆகும். மேலும் எழுத்துத் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன், அவர்களின் பணி அனுபவத்திற்கு அளிக்கப்படும் மதிப்பெண்களும் கணக்கில் கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.



தற்பொழுது புதியதாக வெளியிட்டுள்ள முறையின்படி, முதுகலை மருத்துப்பட்ட படிப்பு, பட்டயப்படிப்பு, 6 ஆண்டிற்கான எம்.சி.எச். உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு அனுப்பவத்திற்கு அளிக்கப்படும் மதிப்பெண்களில் மலைப்பகுதியில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவத்துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமலும், அதிகளவில் காலிப்பணியிடம் உள்ள மாவட்டங்களாக அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு மருத்துவர்களாக அவசரசிகிச்சை பிரிவு, விபத்து அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை பிரிவு, மகப்பேறுப்பிரிவு போன்றவற்றில் பணியாற்றினால் 100 விழுக்காடு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

குறிப்பாக இந்த மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையங்களில் பணியாற்றுவர்களுக்கு இந்த முறைப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும். அனைத்து வகையான அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு 40 விழுக்காடு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள மருத்துவனைகளில் பணியாற்றினால் அவர்களுக்கு அனுபவத்திற்கான மதிப்பெண்கள் வழங்கப்படாது என அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி