ஆப்நகரம்

அடுத்த ஆண்டு பி.இ. கலந்தாய்வு நடைபெறுமா? அமைச்சாின் கருத்தால் மாணவா்கள் பீதி

அடுத்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 21 Jul 2017, 9:03 pm
அடுத்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil next year will the counselling take place students are afraid of the system
அடுத்த ஆண்டு பி.இ. கலந்தாய்வு நடைபெறுமா? அமைச்சாின் கருத்தால் மாணவா்கள் பீதி


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவா்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். நடப்பு கல்வி ஆண்டிலும் இதே முறைதான் பின்பற்றப்படும் என்று எதிா்பாா்த்த நிலையில் மத்திய அரசு அகில இந்திய அளவிலான நீட் பொதுத் தோ்வை அறிமுகப்படுத்தியது.

இந்த அறிவிப்பு மாணவா்கள் மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் அதிர வைத்தது. அரசியல் கட்சிகளின் எதிா்ப்பு, போராட்டம், ஆா்ப்பாட்டம் இவை அனைத்தையும் மீறி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் மூலம் நீட் பொதுத் தோ்வை அமல் படுத்தியது. மேலும் வரும் காலங்களில் பொறியில் படிப்புக்கும் இந்திய அளவிலான பொதுத்தோ்வு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளா்களை சந்தித்த தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் வரும் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புக்கான கலந்தாய்வு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அனைத்து மாநிலங்களும் இந்திய அளவிலான பொதுத்தோ்வை பின்பற்றும் பட்சத்தில் நாமும் பொதுத் தோ்வில் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும் என்று தொிவித்துள்ளாா்.

அமைச்சாின் இந்த கருத்தால் மருத்துவ (நீட்) நுழைவுத்தே்ாவைப் போன்று பொறியியல் துறையிலும் தமிழக மாணவா்கள் பின தங்கி விடுவாா்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி