ஆப்நகரம்

10 , 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது!

தனியார் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளின் இயக்குநரகம் தகவல் வெளியிடுள்ளது.

Samayam Tamil 23 Jul 2018, 4:02 pm
தனியார் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளின் இயக்குநரகம் தகவல் வெளியிடுள்ளது.
Samayam Tamil vyapam


விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு எந்த விதமான பாடங்களையும் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளின் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பள்ளிகளின் இயக்குநரகத்தின் தலைமை பொருப்பு அதிகாரி கூறுகையில்’10 , 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்கு எந்த ஒரு சிறப்பு வகுப்பும் நடத்தக்கூடாது. மேலும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில்மாணவர்களை 12 மணிநேரம் தொடர்ந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வருத்துவது தவறு . மெதுவாக கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு நடத்தலாம். அதுவும் பெற்றோர்களின் கைப்பட எழுதி தனது குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் மட்டுமே சிறப்பு வகுப்பு நடத்தலாம். என்று கூறினார்

இதற்கு பதிலளித்த தனியார்பள்ளிகளின் சார்பில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது ‘ ஏற்கனவே நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தவர்களை வைத்து தனியார் பள்ளிகள் விளம்பரப்படுத்த கூடாது என்று கூறப்பட்டது. தற்போது இதுபோன்ற விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை . ஆனால் சிறப்பு வகுப்பு நடத்துவது என்பது மாணவர்களின் நன்மைக்கே’ என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி