ஆப்நகரம்

இந்த அரசு பள்ளிகளில் அனைவரும் பெயில்

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 73 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

TNN 1 Jun 2016, 2:08 pm
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 73 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil no one passed in 73 manipur govt schools
இந்த அரசு பள்ளிகளில் அனைவரும் பெயில்


மணிப்பூர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில், 73 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 323 அரசு பள்ளிகளில் இருந்து 6,484 மாணவர்கள், இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். அதில், 2,781 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 42.8 சதவீதமாக உள்ளது எனவும் அம்மாநில பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், 28 அரசு பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர் எனவும், முதல் 20 இடங்களை பிடித்த மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் 28 அரசு பள்ளிகள் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளனர். இது கடந்த 2014-ஆம் ஆண்டில் 48 அரசு பள்ளிகள் எனவும், கடந்த 2015-ஆம் ஆண்டில் 70 அரசு பள்ளிகள் எனவும் அதிகரித்து, தற்போது 73 அரசு பள்ளிகள் என அதிகரித்துள்ளது.

கல்வித்துறையில் தலை விரித்தாடும் ஊழலும், ஆசிரியர்களின் அக்கறையின்மையுமே இதற்கு காரணம் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி