ஆப்நகரம்

+2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்போனில் SMS அனுப்ப ஏற்பாடு

இந்த ஆண்டு +2 மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய் மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

TNN 10 May 2017, 7:08 pm
இந்த ஆண்டு +2 மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய் மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil now easily get your exam results via sms minister sengottaiyan
+2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்போனில் SMS அனுப்ப ஏற்பாடு


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், இந்த அண்டு +2 தேர்வு எழுதியுள்ள ஒன்பதரை லட்சம் மாணவர்களுக்கு, தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடங்களில், அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, மதிப்பெண் விபரங்களுடன் தேர்வு முடிவுகள் அனுபப்படும் என தெரிவித்துள்ளார்.

அதோடு மாணவர்களின் சான்றிதழ்களை மின் ஆவணம் மூலம் பாதுகாக்கப்படும் எனவும், நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாட திட்டம் தயாரிக்கப்படும். இந்த பாடதிட்டத்தை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நாளை நடைப்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி