ஆப்நகரம்

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் படிப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Samayam Tamil 19 Nov 2018, 4:16 pm
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil iiiii


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:

கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு ஆகியவற்றில் (2019 - 2020) ஓராண்டு கால பட்டயப் படிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப் படுத்துதலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் பட்டயப்படிப்பு சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டு காலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

கட்டணம் : சேர்க்கைக் கட்டணம் ரூ.2,500.

முகவரி : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தரமணி, சென்னை

விண்ணபிக்க கடைசி நாள் : டிசம்பர் 20 தேதி .

இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542992, 95000 12272 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

அடுத்த செய்தி