ஆப்நகரம்

பத்மா ஷேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவர் தேசிய அளவில் 3ம் இடம்

கேகே நகர் பத்மா ஷேஷாத்ரி பாலபவன் பள்ளியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் பாலாஜி என்ற 12-ம் வகுப்பி சிபிஎஸ்சி பயிலும் மாணவர் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

Samayam Tamil 2 May 2019, 11:22 pm
கேகே நகர் பத்மா ஷேஷாத்ரி பாலபவன் பள்ளியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் பாலாஜி என்ற 12-ம் வகுப்பி சிபிஎஸ்சி பயிலும் மாணவர் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
Samayam Tamil exam


கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களில் சதம் அடித்த பாலாஜி, இயற்பியல், ஆங்கிலம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் 99 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு பாலாஜி பேட்டி அளித்தார். 95 சதவீத மதிப்பெண் பெறுவது உறுதி என அவர் தெரிவித்திருந்தார். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்றது தனக்கு வியப்பூட்டுவதாக அவர் கூறினார்.

வான அறிவியல் பாடம் படிக்க பாலாஜிக்கு அதீத விருப்பம்.

பாலாஜியின் தாயார் பார்கவி கூறுகையில் பாலாஜி இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறினார் என்று தெரிவித்தார்.

70-85 சதவீத சராசரி மதிப்பெண் விகிதமே இந்த ஆண்டு உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவு என்றார் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர்.

அடுத்த செய்தி