ஆப்நகரம்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுத கோரிக்கை!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தே தீரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு மையத்தை மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அமைக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Samayam Tamil 24 Apr 2020, 1:26 pm
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தே தீரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு மையத்தை மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அமைக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Samayam Tamil TN 10th Public Exam


கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் எழுந்தது. மேற்படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு முக்கியமானதால், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த கால அட்டவணை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறவிக்கப்படவில்லை.

Also Read This:

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுதல் அபாயம் இருப்பதால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதுவதற்கு பதிலாக, படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் அருணன் கூறுகையில்,

தேர்வு மையத்தை மாற்றும் போது அதற்கு ஏற்றவாறு பயண வசதியும் ஏற்படுத்த வேண்டும். மேலும், சமூக விலகலையும் கடைபிடிக்க வேண்டும். எனவே, மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அதற்கு வசதியாக தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடையே 1 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு எழுத வழிவகை செய்யப்படும் என்றார்.

அடுத்த செய்தி