ஆப்நகரம்

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் அறிவித்துள்ளது.

TNN 2 Nov 2016, 11:02 pm
சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் அறிவித்துள்ளது.
Samayam Tamil plus 2 results announced tomorrow for who reappear
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளது. தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும், அதன் மூலமாகவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கூறியதாவது: தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணைதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். அதன்மூலமாகவே, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற 4-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் வருகிற 7-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நேரில் சென்று உரிய கட்டணத்தை கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி