ஆப்நகரம்

எஸ்.சி. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவு!

எஸ்.சி மாணவர்களின் கல்லூரி கல்வி கட்டணம் தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய சமூக நலத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 16 Jul 2018, 12:40 pm
எஸ்.சி மாணவர்களின் கல்லூரி கல்வி கட்டணம் தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய சமூக நலத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
Samayam Tamil sc
எஸ்.சி. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவு!


உயர்கல்வி படிக்கும் எஸ்.சி மாணவர்களுக்கு, 'போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' என்ற கல்வி உதவித் தொகை, மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த கல்வி உதவித்தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசிடம் இருந்து உதவித்தொகை வரும் வரையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாது என்பதால் கல்லூரியில் எஸ்.சி. மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.

இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், எஸ்.சி மாணவர்கள், கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி, அவர்களை சேர்ப்பதற்கு, கல்வி மையங்கள் மறுக்கக் கூடாது. மாணவர்கள் கல்வி உதவித்தொகையை அவர்களது வங்கி கணக்கில் அரசு செலுத்தும் வரையில், அவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும். தேவைப்பட்டால், தங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதும், கல்வி கட்டணத்தை கட்டாயம் செலுத்துவதாக, மாணவர்களிடம் இருந்து, சம்பந்தப்பட்ட கல்வி மையங்கள் உறுதி மொழி கடிதங்களை பெறலாம்.

இதுதொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள், அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி