ஆப்நகரம்

புரோட்டா விற்பவரின் இரு மகன்கள் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

புரோட்டா விற்பவரின் இரு மகன்கள் ஐஐடி- ஜெஇஇ (IIT-JEE) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஊரே மெச்சும் மாணவர்களாகியுள்ளனர்.

TOI Contributor 12 Jun 2017, 3:22 pm
அலகாபாத் : புரோட்டா விற்பவரின் இரு மகன்கள் ஐஐடி- ஜெஇஇ (IIT-JEE) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஊரே மெச்சும் மாணவர்களாகியுள்ளனர்.
Samayam Tamil potato sellers sons who cycled 40km for classes make it to iit
புரோட்டா விற்பவரின் இரு மகன்கள் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்


அலகாபாத்தை அடுத்துள்ள சிறிய கிராமம் மந்தி. இந்த கிராமத்தில் வசிக்கும் பிரேம் சந்த் புரோட்டா விற்கும் வேலை பார்த்து வருகின்றார். இவரின் மகன்களான விஷால் அக்ரஹாரி ஐஐடி நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 1,964வது மாணவனாக தேர்வாகியுள்ளார். அதே போல மற்றொரு மகன் சதீஷ் அக்ரஹாரி 2.709வது மாணவனாக தேர்வாகியுள்ளார்.

பிரேம் சந்த் கூறும்போது, “என் வீட்டில் பொருளாதார பிரச்னை இருந்ததால் சரியாக படிக்க முடியாமல் நல்ல வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் என் மகன்களை நன்றாக படிக்க வைக்க முடிவு செய்தேன். மகன்கள் 8ம் வகுப்பு வரை கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்தனர். அதன் பின் பெரிய பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்து வெளியூரில் படிக்க வைத்தேன். அவர்களும் சிறப்பாக படித்தனர்.”

விஷால் கூறுகையில், “நானும் என் சகோதரனும் தினமும் 40 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்தோம். எங்களுக்கு தேர்வு முடிவு வருவதற்கு முன்பே நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது அதை சாதித்துக் காட்டியுள்ளோம்.
நான் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவில் 94.3 சதவிதமும், சதீஷ் 89% மதிப்பெண்ணும் பெற்றோம்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி