ஆப்நகரம்

“தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துள்ளது” : சென்னை உயர்நீதிமன்றம்!

“தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துள்ளது” : சென்னை உயர்நீதிமன்றம்!

Samayam Tamil 22 Mar 2017, 10:56 pm
சென்னை : தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துவிட்டதாகவும், 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தங்களின் பெயரைக்கூட எழுத தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
Samayam Tamil quality of teaching is poor in tamil nadu madras hc observes
“தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துள்ளது” : சென்னை உயர்நீதிமன்றம்!


தமிழகத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் லெட்டர் பேட் கல்வியியல் நிறுவனங்களில் பயின்று பட்டம் மற்றும் பட்டயங்களை பெறுவதாக நீதிபதி என்.கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேசிய ஆசிரியர் கல்வி மையம் (NCTE) கல்வியியல் நிறுவனங்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் எத்தனை கல்வியியல் நிறுவனங்கள் உள்ளன, பட்டம் பெற்று ஆனால் வேலை கிடைக்காத மாணவ, மாணவிகள் மற்றும் இதற்கு மேலும் கல்வியியல் நிறுவனங்கள் நாட்டிற்கு தேவையா என்ற விளக்கம் அனைத்தையும் அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாநில அரசும் அக்கறை கொள்வதில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தன் பெயரைக்கூட எழுதத்தெரியவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். கட்டுமான வசதி இல்லாத, தொடர்ச்சியாக வகுப்புகள் எடுக்காத கல்வியியல் நிறுவனங்கள் தமிழ்நாடு எங்கும் தோன்றிவிட்டது. அதனால் கற்பிக்கும் தரமும் குறைந்துவிட்டது என்று நீதிபதி கூறியுள்ளார். கல்வி வியாபாரம் ஆனது தான் இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். வேலை கிடைக்காத, பட்டதாரி ஆசிரியர்களை தான் கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இது சமூகத்திற்கு நல்லதல்ல என்றும் நீதிபதி கருணாகரன் கூறியிருக்கிறார். வருகின்ற 27ஆம் தேதி இதுகுறித்து தேசிய ஆசிரியர் கல்வி மையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி