ஆப்நகரம்

லதா ரஜினிகாந்த் பள்ளி வேன் ஓட்டுனர்கள் எதற்கு போராட்டம் நடத்தினர்?

ரஜினிகாந்தின் மனைவி நடத்தும் பள்ளி வேன் ஓட்டுனர்களுக்கு மாத சம்பளம் தராததால் அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

TOI Contributor 23 Dec 2016, 1:11 pm
ரஜினிகாந்தின் மனைவி நடத்தும் பள்ளி வேன் ஓட்டுனர்களுக்கு மாத சம்பளம் தராததால் அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil rajinikanth family run school hasnt paid its drivers
லதா ரஜினிகாந்த் பள்ளி வேன் ஓட்டுனர்கள் எதற்கு போராட்டம் நடத்தினர்?


ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பள்ளியை வேளச்சேரியில் நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் வேன் ஓட்டுனர்களாக சுமார் 28 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரியான சம்பளம் கொடுக்கவில்லை என்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கடந்த மாத சம்பளம் இன்னும் தரவில்லை என்று கூறி, இந்த ஓட்டுனர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் கடந்த திங்கள் கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சில ஓட்டுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது, ''கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசின் பண மதிப்பிழப்பும் சேர்ந்து கொண்டதால், எங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. நாங்கள் எப்படி மாத வாடகை கொடுப்பது, தினப்படி செலவு செய்வது. வங்கி விடுமுறை, முதல்வர் ஜெயலலிதா மரணம், வர்தா புயல் ஆகியவற்றை தாமதத்திற்கு காரணங்களாக கூறி வருகின்றனர். எங்களது கோரிக்கைக்கு பள்ளியில் தலைமை நிர்வாகிகளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை'' என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி