ஆப்நகரம்

மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க நூலகம்; கட்டுமானத்திற்கு 2ஆம் கட்டமாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு!

உலகத் தமிழ்ச்சங்க நூலத்திற்கு, ரூ.6 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Feb 2018, 1:25 am
சங்கம் வளர்த்த மதுரையில், தமிழ்ச்சங்க நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2ஆம் கட்ட நிதியாக ரூ.6 கோடி வழங்கி, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil rs 6 crore released for construction of world tamil sangam library in madurai
மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க நூலகம்; கட்டுமானத்திற்கு 2ஆம் கட்டமாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு!


இதில் குழந்தைகளுக்கு தனிப்பிரிவு, போட்டித் தேர்வாளர்களுக்கு தனிப்பிரிவு, பொதுப்பிரிவு என பல்வேறு வசதிகளுடன் கட்டப்படுகிறது.

சுமார் 6 லட்சம் புத்தகங்கள் முதல் கட்டமாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மே 2017ல் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள், தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் நூலகம் அமையும் இடத்தை பார்வையிட்டனர்.

அவர்களின் பரிந்துரைப்படி, 1300 சதுர அடியில் நூலகம் உருவாக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிச்சாமி ரூ.15 கோடி நிதி வழங்கி முதல்கட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

உலகத் தமிழ்ச்சங்க நூலகம் அமைக்க ஒட்டுமொத்த செலவு ரூ.50 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rs 6 crore released for construction of World Tamil Sangam library in Madurai.

அடுத்த செய்தி