ஆப்நகரம்

தனியார் பள்ளியில் 25% இடஒதுக்கீடு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

TNN 26 May 2017, 1:36 pm
தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
Samayam Tamil rte 25 quota online application end today
தனியார் பள்ளியில் 25% இடஒதுக்கீடு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டு இச்சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க 20.04.2017 முதல் 18.05.2017 வரைகால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இந்த சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலவரையறை 26.05.2017 வரை நீட்டிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைனிலோ விண்ணப்பிக்கலாம்.

அடுத்த செய்தி