ஆப்நகரம்

பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: ஆன்லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

TNN 17 May 2017, 9:50 pm
சென்னை : தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil rti 25 quota online application date postponted
பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: ஆன்லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் 2017-2018ம் கல்வியாண்டு முதல் 25 ரூ ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அரசால் ஆணையிடப்பட்டது.

இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இச்சேர்க்கைக்கு இணைய வழியாகவிண்ணப்பிக்க 20.04.2017 முதல் 18.05.2017 வரைகால அவகாசம் வழங்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இவ்வகைச் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலவரையறை 26.05.2017 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்/மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர்/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்/உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்/வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10,000க்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளர்.

அடுத்த செய்தி