ஆப்நகரம்

கல்விக்கடனை அடியாட்கள் மூலம் வசூலிக்கும் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் தனியார் நிறுவன அடியாட்கள் அந்தப் பணத்தை வசூலிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 1:41 pm
டெல்லி: பாரத ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் தனியார் நிறுவன அடியாட்கள் அந்தப் பணத்தை வசூலிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கல்விக்கடனை அடியாட்கள் மூலம் வசூலிக்கும் வங்கி


பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கல்விக்கடனில் திரும்ப செலுத்தப்படாமல் உள்ள தொகையில் 50 சதவீதத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். இதனால், மொத்த கல்விக்கடன் நிலுவைத் தொகையான ரூ.1,565 கோடியில் ரூ.915 கோடி ரூபாயை ஏ.ஆர்.சி. என்ற தனியார் சொத்து மீட்பு நிறுவனம் வசூலிக்கும்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்விக்கடனுக்கான தவணையை 3 முறைக்கு மேல் செலுத்தாவிட்டால், தனியார் கடன் வசூல் நிறுவனங்கள் அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் முன்பாக, கல்விக்கடனைத் திரும்ப செலுத்த முடியாத மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி லெனின் கடன் வசூல் செய்யும் தனியார் நிறுவனங்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரதக்கது.

அடுத்த செய்தி