ஆப்நகரம்

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதலாம்!

நீட் தேர்வு எழுத வயது வரம்பை தளர்த்தி உச்சநீதிமன்றம் இடைக்கால சலுகை அறிவித்துள்ளது.

Samayam Tamil 30 Nov 2018, 3:07 pm
பொதுப்பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம் என்றும், வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
Samayam Tamil TH08BRIEFLY1AGNS2Q3KDI3jpgjpg1536954507
நீட் தேர்வு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால சலுகை


தற்போது நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு குறைந்தப்பட்ச வயது வரம்பு 17 என்றும், அதிகப்பட்ச வயது வரம்பு 25-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 30-ஆக உள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கான வயது வரம்பு தளர்வு கோரி பொதுநலன் மனு ஒன்று முறையிடப்பட்டது. அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2019 நடைபெறும் நீட் தேர்வில் வயது வரம்பு எதுவும் கிடையாது. பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம் என உத்தரவு பிறப்பித்துனர்.

எனினும் இது இடைக்கால உத்தரவு தான். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மாறும் பட்சத்தில், இந்த உத்தரவு செல்லுபடியாகாது. அதனால் வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தது. அதை கருத்தில் கொண்டு, நீட் தேர்வை நடத்தும் அமைப்புகள் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுங்களில் நீட் தேர்வு குறித்து பல்வேறு வழக்குகளில் பல்வேறு தீர்ப்புகள் மனுதாரருக்கு ஆதரவாக வழங்கப்பட்டன. ஆனால் தற்போது நீட் தேர்வு குறித்த செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் பொது பிரச்னையாக பார்க்க தொடங்கியுள்ளது.

தற்போது வயது வரம்பு தளர்வு என்பது இடைக்கால உத்தரவு தான். ஒருவேளை இறுதி தீர்ப்பு மாறிவந்தால் அதனால் குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். இதன் காரணமாக நீட் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் இறுதியாக முடிவை எடுப்பது அவசியாமகியுள்ளது .

அடுத்த செய்தி