ஆப்நகரம்

சிபிஎஸ்இ உட்பட எந்த பள்ளிகளிலும் சிறப்பு பயிற்சி நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை

சிபிஎஸ்இ உட்பட எந்த பள்ளிகளிலும் சிறப்பு பயிற்சி நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 10 May 2018, 9:49 am
சிபிஎஸ்இ உட்பட எந்த பள்ளிகளிலும் கோடை கால சிறப்பு பயிற்சி நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
Samayam Tamil school leave


தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதியோடு தேர்வுகள் முடிந்தது. இதனையடுதது ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பல பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களை பெயருக்கு என்று அறிவித்து விட்டு, அடுத்த ஆண்டு வகுப்பில் மாணவர்கள் நன்றாக படிக்கவேண்டும் என்று சிறப்பு பயிற்சி நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்று சேர, தற்போது கோடை விடுறையில் சிபிஎஸ்இ உட்பட எந்த பள்ளிகளிலும் கோடை கால சிறப்பு பயிற்சி நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்விததுறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள உத்தரவில்,

“மாணவர்களின் நலனைக் கருதி கோடை விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ.பள்ளிகள் மற்றும் இதர வாரியப்பள்ளிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என ஏற்கனவே அமைச்சர் அறிவித்துள்ளார்.

எனவே மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ. பள்ளிகள் மற்றும் இதர வாரியப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறக் கூடாது என அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி