ஆப்நகரம்

ஆசிரியரை அன்பால் நெகிழ வைத்த மாணவர்களின் போராட்டம் வெற்றி!!

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆசிரியர் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அந்த ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jun 2018, 5:02 pm
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆசிரியர் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அந்த ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ஆசிரியரை அன்பால் நெகிழ வைத்த மாணவர்களின் போராட்டம் வெற்றி!!
ஆசிரியரை அன்பால் நெகிழ வைத்த மாணவர்களின் போராட்டம் வெற்றி!!


திருவள்ளூர் மாவட்டம் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், பகவான் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பணியிட மாற்றம் வழங்கியதால், அந்தப் பள்ளியிலிருந்து விடைப்பெற்றுச் சென்றுள்ளார்.

அப்போது, மாணவர்கள் அவர் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என அவரைக் கட்டியணைத்து அழுதுள்ளனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களும் பெற்றோர்களும் பகவான் ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், ஆசிரியர் பகவானின் பணியிட மாற்ற உத்தரவு 10 நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதையடுத்து, மீண்டும் வெளியகரம் பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் பகவானைப் பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

அடுத்த செய்தி