ஆப்நகரம்

நீட் நுழைவுத் தேர்வு கெடுபிடி: சட்டையை கத்தரித்த பின் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு படிக்க மாணவர்கள் இன்று நீட் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதினர்.

TOI Contributor 7 May 2017, 6:01 pm
சென்னை : நாடு முழுவதும் மருத்துவ படிப்பு படிக்க மாணவர்கள் இன்று நீட் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதினர்.
Samayam Tamil sleeve cut from the students shirt in neet exam center egmore
நீட் நுழைவுத் தேர்வு கெடுபிடி: சட்டையை கத்தரித்த பின் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு


தேர்வு அறைக்கு இன்று காலை 7.30 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு 10 மணி முதல் 1 மணி வரை நடைப்பெற்றது.

தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு, நகை அணிதல், என கெடுபிடி அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் அறியாத சில மாணவிகள் நகைகளை அணிந்து சென்றனர். அவர்கள் நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துச் சென்றனர்.



அதே போல் மாணவர்கள் தாங்கள் அணிந்து வந்திருந்த முழுக்கை சட்டைக்கு அனுமதி வழங்காததால் தேர்வுக்கு வரும் மாணவர்களை சோதனையிடும் அதிகாரிகள், மாணவர்களின் முழுக்கை சட்டையை அரை கை சட்டையாக வெட்டினர்.
சென்னை எழும்பூரில் இருந்த தேர்வு மையத்திற்கு வந்த பல மாணவர்களின் முழுக்கை சட்டையை, கத்திரிக்கோலால் வெட்டி, அரைக் கை சட்டையாக மற்றி அணிந்து சென்றனர்.

அடுத்த செய்தி