ஆப்நகரம்

3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘Spoken English’ – அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை Spoken English Class நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Jan 2020, 10:02 am
தமிழகத்தில் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Samayam Tamil Minister Sengottaiyan


நடிகர் சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் சென்னையில் நேற்று நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ‘தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தேசிய அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது.

உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில், 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப்பேச்சு பயிற்சி வழங்கப்படும். வாரம் ஒரு முறை 45 நிமிடம் இந்த ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழதகத்தில் படித்து விட்டு வேலை இல்லை என்ற நிலையே இருக்காது. அந்த வகையில், விடுமுறை நாட்களில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இனி வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பெரும் போட்டி ஏற்படும். பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவி ஒத்துழைப்போடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து, மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

நீட் பயிற்சிக்காக ஒசூரில் ஒரு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நிர்வாக இயக்குநராக உள்ளார். அவர் ஒரு வருடத்துக்கு முன்பு என்னைச் சந்தித்தார். அப்போது அவர் என்னிடத்தில் நீட் பயிற்சி மையத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். ஒசூர், ஆந்திரா, மகராஷ்டிரா, கர்நாடகா என பல இடங்களில் இருந்தும் மாணவர்கள் உள்ளனர்.

ஆனால், நீட் பயிற்சின் போது பாடத்தை சொன்ன உடனே புரிந்து கொள்ளக்கூடி ஐ.க்யூ தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தான் உள்ளதாக நிர்வாக இயக்குநர் கூறினார். எந்த தடையும், எந்த தலையீடும் இல்லாமல் தமிழக மாணவர்கள் முத்துக்களாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளனர்’ இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

நூல் வெளியீட்டு விழாவில், ‘வித்தியாசம்தான் அழகு’, ‘உலகம் பிறந்தது நமக்காக’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் ‘வித்தியாசம்அழகு’ என்ற புத்தகத்தை பேராசிரியர் ச. மாடசாமி எழுதியுள்ளார். ‘உலகம் பிறந்தது நமக்காக’ என்ற புத்தகம் பல்வேறு முதல் தலைமுறை பட்டதாரி எழுதிய அனுபவங்களின் தொகுப்பு ஆகும்.

அடுத்த செய்தி