ஆப்நகரம்

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்ததில் பலனடைந்த மாணவர்கள்

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்ததில் பலனடைந்த மாணவர்கள் பட்டியலை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 29 May 2018, 7:34 pm
சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்ததில் பலனடைந்த மாணவர்கள் பட்டியலை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil cbse-board-class-12th


அண்மையில் நடந்த சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதம் மற்றும் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களின் வினாத்தாள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியானது.

டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் 12ஆம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ஆம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வெளியானது. இதனால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாற்று தேதி அறிவிக்கப்பட்டன.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஎஸ்இ நிர்வாகம் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்தது. இதன்பேரில் டெல்லி போலீசார் சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது தொடர்பாகவும், எந்தெந்த இணையதளம் மற்றும் இ-மெயில் முகவரியிலிருந்து வினாத்தாள்கள் அனுப்பப்பட்டன என்ற தகவலை கூகுள் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளனர்.

பின், கூகுள் அளித்த தகவலை வைத்து டெல்லி போலீசார் ஆய்வறிக்கை ஒன்றை சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் அளித்துள்ளனர். இதன்படி, வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்ததால் பலனடைந்த மாணவர்கள் மற்றும் அதனை பரப்பிய மாணவர்களின் பட்டியலைத்த தயாரித்து வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஆசிரியர்களிடம் விசாரணை நடக்கிறது.

அடுத்த செய்தி