ஆப்நகரம்

ஏழு ஆண்டுகளுக்கு மேல் அரியர் வைத்தால் டிகிரி கிடையாது : அண்ணா பல்கலை

ஏழு ஆண்டுகளுக்கு மேல் அரியர் வைத்த மாணவர்களுக்கு பட்டம் கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Dec 2018, 4:02 pm
ஏழு ஆண்டுகளுக்கு மேல் அரியர் வைத்த மாணவர்களுக்கு பட்டம் கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil download (4)


இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைகழகம் மற்றும் கல்லுரி மாணவர்களும், தங்களின் படிப்பு காலத்தில், தேர்ச்சி பெறாதபாடங்களுக்கு அடுத்தமூன்று ஆண்டுகள் வரை அடியர் தேர்வு எழுதலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவருக்கு பட்டம் வழங்கப்படும்.

ஆனால் அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்களும், தங்களின் படிப்பு காலத்தில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டியிருந்தது. இதனால் பல்கலைக்கழத்திற்கு பணிச்சுமைஅதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மற்றபல்கலைக்கழகங்கள் போல்அண்ணா பல்கலைகழகமும் அரியர் தேர்வுகள்விஷயத்தில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, அண்ணா பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பல்கலை ஏற்கனவே அறிவித்தபடி, அரியர் தேர்வுக்கான சலுகை காலம் முடிந்து விட்டது. எனவே, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, இனி தேர்வு நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி