ஆப்நகரம்

12ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியீடு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

TNN 15 May 2017, 9:40 am
சென்னை: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
Samayam Tamil students will get plus two temporary marksheet from today
12ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியீடு


கடந்த 12ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தர வரிசை வெளியிடப்பட மாட்டாது என தமிழக அரசுத் தேர்வு இயக்கம் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து,மாணவ-மாணவிகள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழ்களை வருகிற 17ஆம் தேதி முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலத்துடன் தமிழிலும் மாணவர் பெயர் பெற்றுள்ளது.

மேலும், கடந்த 12ஆம் தேதியே துவங்கிய மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Students will get +2 temporary marksheet from today

அடுத்த செய்தி