ஆப்நகரம்

summer vacation:மாணவர்களுக்கு நற்செய்தி- கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2019, 1:43 pm
தமிழகத்தில் உள்ளபள்ளிகளுக்கு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறைஅறிவித்துள்ளது.
Samayam Tamil images (1)


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதால்1முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வை ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநரகம்ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் ஏப்ரல் 12 ஆம் தேதிதான்2019ம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் என்று அறிவித்துருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 13 ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை துவங்கிறது. மக்களை தேர்தலால் இந்த ஆண்டு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள்திறக்கப்படும் அன்றே புதிய பாடத்திட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி