ஆப்நகரம்

பொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்!

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் வேளையில், வினா-வங்கி புத்தகங்கள் தட்டுபாடின்றி கிடைக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Samayam Tamil 27 Feb 2020, 9:05 am
தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் வேளையில், வினா-வங்கி புத்தகங்கள் தட்டுபாடின்றி கிடைக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Samayam Tamil tn public exam


தமிழகத்தில் மாநில பாடத்திட்டன் கீழ் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பில் சுமார் 9.5 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பில் 8.16 லட்சம் மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வினா-வங்கி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு வினாவங்கி புத்தகங்கள் பெற்றோர் ஆசிரியர் கழக டிபிஐ மையத்தில் விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது பராமரிப்புப் பணி நடந்து வருவதால், மேலும் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வினா வங்கி புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்பதை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

10,12 ஆம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் தட்டுபாடு! மாணவர்கள் வேதனை!!

இதனிடையே வினா-வங்கி புத்தகங்களுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், எப்போது வந்து கேட்டாலும் பிரதிகள் இல்லை என்று ஊழியர்கள் கூறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இது பற்றிய பெற்றோர் ஆசிரியர் கழகம் தரப்பில் கூறுகையில், ’12 ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு (ஆங்கில வழியில்) 1.50 லட்சம் வினா வங்கி பிரதிகள் அச்சிடப்பட்டது. அவற்றில் 1.30 லட்சம் பிரதிகள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதே போல் தமிழ் வழி மாணவர்களுக்கான கணித பாட வினா வங்கி புத்தகங்கள் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. அதில் 30 பிரதிகள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட புத்தங்களை தவிர மற்ற அனைத்து புத்தகங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வினா வங்கி புத்தங்களுக்கு தட்டுபாடு ஏற்படாத வகையில், அனைத்து மையங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோர் ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி