ஆப்நகரம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த உடனே விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!

TN Public Exam 2020: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Mar 2020, 2:05 pm
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 31 ஆம் தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil TN Government Examination


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 24 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு 26 ஆம் தேதியோடும் பொதுத்தேர்வுகள் நிறைவு பெறுகிறது. புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு நடைபெறும் முதல்ஆண்டுத் தேர்வுகள் இதுவாகும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மார்ச் 31 முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. பதிவு செய்த மதிப்பெண்களை தேர்வுத்துறை இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி