ஆப்நகரம்

நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன.

TNN 1 Mar 2017, 1:45 pm
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன.
Samayam Tamil tamil nadu board exams will begin from tomorrow onwards
நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்


தமிழகத்தில் 2016-2017 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை தொடங்கி வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை சுமார் 9 லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2,427 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்வு மையங்களில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே 12ஆம் தேதி காலை வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu 12th board exam is set to begin tomorrow on March 02, 2017. Over 9 lakh students will be attempting the SSLC Examinations.

அடுத்த செய்தி