ஆப்நகரம்

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Apr 2020, 12:51 pm
தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Edappadi Palanisamy


கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கொரோனா வார்டுகளாக பள்ளிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த இக்கட்டான சூழலில், கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு தனியார் பள்ளிகள் குறுஞ்செய்திகள் அனுப்புவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (ஏப்.6) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அது நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவர்கள், பெற்றோர்களிடத்தில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு முடிந்த பிறகு, நோயின் தன்மைக்கு ஏற்றவாறு தேதி அறிவிக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி