ஆப்நகரம்

TNEA Counselling: ஆறு நாளில் அறுபதாயிரம் விண்ணப்பங்கள் பதிவு!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு கடந்த 2ம் தேதி துவங்கியது. இந்நிலையில், ஆறு நாளில் அறுபதாயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

Samayam Tamil 8 May 2019, 1:03 pm
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு கடந்த 2ம் தேதி துவங்கியது. இந்நிலையில், ஆறு நாளில் அறுபதாயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil tnea 2019.


தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வந்தது. இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 2ம் தேதி துவங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கி இன்றோடு ஆறு நாள் ஆன நிலையில், இதுவரையில் மொத்தம் 60 ஆயிரத்து 362 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 52 ஆயிரத்து 232 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பப் பதிவு செய்ய மே 31ம் தேதி கடைசி நாளாகும்.

மாணவர்கள் http://www.tneaonline.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இணையதள பக்கத்தில் Click here for New Registration என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்யும் போது மாணவர்கள் கீழ்கண்ட விவரங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்:
1. விண்ணப்பதாரரின் பெயர்
2. மின்னஞ்சல் முகவரி
3. அலைபேசி எண்
4. வகுப்பு/சாதி தகவல்கள்
5. பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்
6. ஆதார் எண்
7. பெற்றோரின் ஆண்டு வருமானம்
8. பள்ளி தகவல்கள் (8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)
9. பன்னிரெண்டாம் வகுப்பு பதிவெண்
10. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

ஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும், இதற்கான விண்ணப்பதிவு மே 31 தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொறியியல் படிப்பில் சேர தகுதியும் விருப்பமும் .உள்ள மாணவர்கள், மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி