ஆப்நகரம்

மேலும் 3 புதிய மருத்துவக்கல்லூரிகள்.. தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயரும்..

TN New Medical Colleges 2019: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Nov 2019, 1:18 pm
தமிழகத்தில் மேலும் புதிதாக 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil TN New Medical Colleges 2019


அண்மையில் தமிழகம் உள்பட ஆறு மாநிலங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு விபரங்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

காலாண்டுத் தேர்வில் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி!

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் புதிதக மேலும் 3 இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளும் 325 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. மொத்தம் 975 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 40 சதவீதமும் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி பங்கீடு செய்யப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும், மத்திய அரசு சார்பில் 195 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செருப்புக்கு பதிலாக ‘ஷூ’ வழங்க ஒப்புதல்!

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் இருந்து ஆண்டுதோறும் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் உருவாகின்றனர். இந்த நிலையில், 9 மருத்துவக்கல்லூரிகள் புதிதாக அமையும் பட்சத்தில் 1,500 மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே, அதிக மருத்துவர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த செய்தி