ஆப்நகரம்

சனிக்கிழமை லீவ் கேன்சல்! கட்டாயம் எல்லாரும் ஸ்கூல், காலேஜ் போகணும்! உத்தரவு போட்ட தமிழக அரசு.

வருகின்ற சனிக்கிழமையும் அனைத்து பள்ளி கல்லூரிகளும் இயங்கும். மாணவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு எடுக்காமல் வர வேண்டும். ஏற்கனவே அளிக்கப்பட்ட பெரிய விடுமுறைகளை ஈடு செய்யும் வண்ணம் தமிழக அரசு உத்தரவு.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 17 Nov 2022, 4:34 pm
இந்த ஆண்டு தீபாவளி கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாட பட்டது. அதற்காக அடுத்த நாளான 25.10.2022 அன்றும் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதியாக பள்ளி கல்லூரிளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil government school students


குறிப்பாக அதுக்கு முந்தைய நாட்களும் சனி , ஞாயிறு என்பதால் இந்த வருட தீபாவளிக்கு பள்ளி, கல்லூரிகள் நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை ஒட்டி அந்த விடுமுறை அளிக்கப்பட்ட நாளை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற 19/11/2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் இயங்குமென தமிழக அரசு ஏற்கனவே தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே, கொரோனா தாக்கம், மழை விடுமுறை என அதிக நாட்கள் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளுக்கு இந்த பருவம் முதல் அதிகமான மழை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை மறுநாள் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் முழு வேலை நாள் இயங்க உள்ளது. மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள பட்டுள்ளது..
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி