ஆப்நகரம்

தொடர் கனமழையால் இன்று இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

TN Rains Schools Leave: கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.

Samayam Tamil 31 Oct 2019, 7:16 am
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (அக். 31) புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டள்ளது.
Samayam Tamil rain school


அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முதல் சென்னை, சென்னை சுற்றுவட்டாரத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Also Read This: இன்னும் இரண்டு நாளைக்கு அடிச்சு வெளுக்கும் மழை!

இந்நிலையில், குமரிப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறத் தொடங்கியது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய தொடங்கியது.

நேற்று கனமழை காரணமாக தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம் என எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதே போல், நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா என நான்கு தாலுகாவில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொடைக்கானல், ஆடலூர், பன்றிமலை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

போபாலில் வெளுத்து வாங்கும் மழை!!

அடுத்த செய்தி