ஆப்நகரம்

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பப் பதிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Jun 2019, 12:40 pm
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mbbs bds admission
mbbs bds admission


நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான சேர்க்கை எப்போது நடைபெறும் என்று மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்த நிலையில், மருத்துவப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: ‘தமிழகத்தில் மொத்தம் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் 3 ஆயிரம் எம்பிபிஎஸ் சீட் உள்ளது. கரூரில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரியில் 150 இடங்கள் உள்ளது. இதே போல் திருநெல்வேலி, மதுரை மருத்துவக்கல்லூரிகளில் தலா 100 இடங்கள் கூடுதலாக்கி, மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இந்தாண்டு மொத்தம் நமக்கு 350 எம்பிபிஎஸ் சீட் கூடுதலாக கிடைத்துள்ளது.

மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. நாளை முதல் மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதோடு விண்ணப்பிக்கும் முறை, கையேடு, சேர்க்கை பற்றிய விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நாளை முதல் ஆன்லைனில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும். மூன்று நாட்கள் வரையில் இந்த கவுன்சிலிங் நடைபெற வாய்ப்புள்ளது’

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி