ஆப்நகரம்

தனியார் பள்ளிகளில் 25% இடஓதுக்கீடு : இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளிலுள்ள 25% இடஓதுக்கீட்டுக்கான இடங்களில் சேர விரும்பும் மாணவர்களும் அவரகளது பெற்றோரும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன்லில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

TNN 24 Apr 2017, 5:26 pm
சென்னை : தனியார் பள்ளிகளிலுள்ள 25% இடஓதுக்கீட்டுக்கான இடங்களில் சேர விரும்பும் மாணவர்களும் அவரகளது பெற்றோரும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன்லில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
Samayam Tamil tamil nadu right to education application admission process made e sevai maiyam
தனியார் பள்ளிகளில் 25% இடஓதுக்கீடு : இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்


இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், வருவாய் குறைந்த பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே, கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும்.

இந்த நிதியை பள்ளிகளுக்கு வழங்குவது, மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வருகிற கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 20-ம் தேதி முதல் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற மே 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 9,000 தனியார் சுயநிதி, மெட்ரிக் மற்றும், 'பிரைமரி' பள்ளிகளில் 1,26,262 இலவச சேர்க்கைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை அந்தஸ்துள்ள பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை நடக்காது.

இந்த தனியார் பள்ளிகளிலுள்ள 25% இடஓதுக்கீட்டுக்கான இடங்களில் சேர விரும்பும் மாணவர்களும் அவரகளது பெற்றோரும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன்லில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


அரசு இசேவை மையங்களில் விண்ணப்பிக்க வருபவர்கள், குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றுக்கான ஏதேனும் ஒரு ஆவணம், இருப்பிடசான்றுக்கான ஆவணம், சாதி சான்று , வருமான சான்று உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துவர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu , Right To Education application, admission process made e-sevai maiyam

அடுத்த செய்தி