ஆப்நகரம்

அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செருப்புக்கு பதிலாக ‘ஷூ’ வழங்க ஒப்புதல்!

TN Govt school Free Shoes: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, ஷாக்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Nov 2019, 1:15 pm
வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செருப்புக்கு பதிலாக ‘ஷூ’ வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil TN Govt School


தமிழகத்தில் கடந்த 2012 முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் விலையில்லா காலணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலணிகளுக்குப் பதிலாக ஷூ, ஷாக்ஸ் வழங்கப்படும் என்று ஜூலை மாதம் நடைபெற்ற சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த திட்டத்துக்காக 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும், இதன் மூலம் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
undefined
முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் தரப்பு கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து, தற்போது 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, ஷாக்ஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2020-2021 கல்வியாண்டு முதல் விலையில்லா ஷூ, ஷாக்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் 53,85,96,631 ரூபாய், தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் 12,85,95,685 ரூபாய் செலவிடப்படுகிறது. ஒட்டு மொத்தமாக ஷூ, ஷாக்ஸ் வழங்கும் திட்டத்துக்காக 66 கோடியே 71 லட்சத்து 92 ஆயிரத்து 316 ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

TN School Free shoes

அடுத்த செய்தி