ஆப்நகரம்

தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.. கிருஷ்ணகிரியில் மட்டும் 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

TN School Education: பள்ளிகளில் குறித்த நேரத்தில் வருகை புரியாத ஆசிரியர்கள் (Teachers Attendance) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2020, 4:03 pm
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தாமதமாக பணிக்கு வந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
Samayam Tamil TN Govt School Biometric Attendance


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தாமதமாக பணிக்கு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து ஆசிரியர்களின் வருகை பதிவை கண்காணிக்கும் வகையில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை கொண்டு வரப்பட்டது. மாவட்ட வாரியாக ஆசிரியர்களின் வருகை பதிவு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் உரிய நேரத்தில் வர வேண்டும். அவ்வாறு குறித்த நேரத்தில் வராத ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வருகை தராத 400 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Also Read This:
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் முறை விவரங்கள்..
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அடுத்த செய்தி