ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன

கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கபட்டன.

TOI Contributor 1 Jun 2016, 8:03 am
கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கபட்டன.
Samayam Tamil tamil nadu schools have opened today
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன


தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கமும் கோரிக்கை வைத்தது. ஆனால், ஜூன் 1ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளி, கல்வித்துறை அறிவித்தது.

முன்னதாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான புத்தகங்கள் இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த தடங்கலும் இன்றி இந்தப் பொருட்கள் மாணவர்களை சென்று அடைய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி