ஆப்நகரம்

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!!

TN Half Yearly Holidays 2020: TN Schools Reopen: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளில் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Jan 2020, 6:34 pm
அரையாண்டு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 6 ஆம் தேதிபள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளி திறந்த முதல் நாளிலேயே நடப்பு பருவத்துக்கான புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil TN Schools Reopen after Half Yearly Exam and festival Holidays


தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 24 ஆம் முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அரையாண்டு, பண்டிகை கால விடுமுறை நாட்கள் அனைத்தும் முடிவடைந்து, திங்கள் (ஜன.6) பள்ளி திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட உடனையே, அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் ஆரம்பமாகிறது. இதற்காக நாளை முதல் நாளிலேயே மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி