ஆப்நகரம்

தடகளத்தில் வென்று படிப்பிலும் வென்ற செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி!

தடகளத்தில் வென்று படிப்பிலும் வென்ற செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி!

TNN 20 May 2017, 9:14 pm
சென்னை : தேசிய அளவில் தடகளத்தில் தங்கம் வென்ற செவி குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவி பத்தாம் வகுப்பு தேர்விலும் 73 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil tamil nadu sslc results 2017 hearing impaired athlete dashes ahead of hurdles
தடகளத்தில் வென்று படிப்பிலும் வென்ற செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி!


வெள்ளிக்கிழமை (19.05.17) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி நிவேதாவின் பெற்றோர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். எந்த சலனமும் இல்லாத மாணவி நிவேதா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தேசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற அதே மகிழ்ச்சியுடன் நிவேதா காணப்பட்டார். காரணம் பத்தாம் வகுப்பு தேர்வில் 73 சதவீத மதிப்பெண் பெற்று நிவேதா தேர்ச்சி அடைந்துள்ளார்.

காது கேட்கும் கருவி பொருத்தியிருந்தாலும் கூட நிவேதாவால் குறைந்த அளவே கேட்க முடியும். சரிவர வாய் பேசவும் முடியாது என்றும் அவரது பெற்றோர் கூறுகின்றனர். இந்த சூழலில் நிவேதா படித்த நுங்கம்பாக்கம் லிட்டில் பிளவர் கான்வன்ட் பள்ளி ஆசிரியர்களின் ஆதரவுடன் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.

பிறக்கும் போதே செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த நிவேதாவை நினைத்து அவரது பெற்றோர் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். ஆனால் நிவேதா இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, மாவட்ட அளவிளான ஓட்டப்பந்தயத்திலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவிளான பின்னோக்கி ஓடும் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். அதன் பிறகே அவரது பெற்றோர் தங்கள் மகளிடம் உள்ள திறமையை அடையாளம் கண்டுள்ளனர்.

எதிர்காலத்தில் நிவேதாவின் கனவை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று அவரது பெற்றோர் உறுதியாக கூறுகின்றனர்.

அடுத்த செய்தி