ஆப்நகரம்

TRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு!

TN TRB PG 2019 Certificate Verification: TRB PG Assistant ஆசிரியர் பணி தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு Certificate Verfication குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது.

Samayam Tamil 29 Oct 2019, 4:32 pm
தமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியில் சேருவதற்கான TRB தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TRB PG Assistant


தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 2,340 பணிக்கு, 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

Trichy Army Recruiment Rally: 14 மாவட்டங்களில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்!!

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் செப்டம்பர் 27 முதல் 29 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் 18 மற்றும் 12 என பாடங்கள் வாரியாக இரண்டு பட்டியல்களாக வெளியிடப்பட்டது. பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 3,824 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

TRB இறுதி வாய்ப்பு! உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

இந்த நிலையில், தற்போது முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி எப்போது நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வரும் நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. இதில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுகிறார்கள்.

வேளாண் துறையில் வேலைவாய்ப்பு! பணியிடம் திருநெல்வேலி!!

மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட அத்தனை விண்ணப்பதாரர்களும் தங்களுடைய கல்விச்சான்றிதழ்களை நவம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையத்தில் சான்றிதழ்களை பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவர்.

அடுத்த செய்தி