ஆப்நகரம்

பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப முடிவு!

TRB Recruitment 2020: தமிழக பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் காலியிடங்கள் விவரங்கள் (TN School Teacher Post Vacancy) சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் விரைவில் தலைமை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் பணி தேர்வு ( TRB Exam 2020) நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 2 Mar 2020, 11:28 am
தமிழகத்தில் தலைமை ஆசிரியர் பணிக்கு காலியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil TRB Recruitment 2020


தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்வதற்கான பொது இடமாறுதல் கவுன்சலிங் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர்கள், தலைமை ஆசரியர்கள் பணிக்கு ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக தலைமை ஆசிரியர் பதவி காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலவர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்தந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணி காலியிடங்களை சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, காலியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருந்தால், மீண்டும் ஒரு முறை கணகெடுப்பு நடத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 1 தேதியின்படி, தலைமை ஆசிரியர் காலியிடங்கள் விவரங்கள் பட்டியலை w1sec.tndse@nic.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, தலைமை ஆசிரியர் பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதா, நேரடி நியமனம் செய்வதா என்பது பற்றி முடிவெடுக்கப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் நடப்பு 2020 ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் காலியிடங்கள் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பதால், விரைவில் தலைமை ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி