ஆப்நகரம்

8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 8,9,10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினியின் அடுத்தக்கட்டமாக உள்ள 'டேப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Samayam Tamil 23 Aug 2019, 6:08 pm
தமிழகத்தில் 8,9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister sengottaiyan


(அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..! இப்போதே தயாராகுங்கள்)

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டிய அரசுப்பள்ளி ஒன்றில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலை அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

‘தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை உயர்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வி பயிலுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனுவே, ஆங்கில வழி வகுப்புகளை இரு மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

(தொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும்- ஆசிரியர் சங்கம்!

மேலும், மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில், பள்ளிக்கு தலா 20 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேக ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். 9, 10,11,12 படிக்கின்ற மாணவர்களின் வகுப்பறைகளுக்கு கணினி வழங்கப்படும். அதில் இணையவசதி ஏற்படுத்தப்படும்.

மலேசியாவில் உள்ள தன்னார்வ அமைப்பு உதவியுடன், தமிழகத்தில் 8,9,10ம் வகுப்பு படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க மடிக்கணினி எனப்படும் ‘டேப்’ வழங்கப்படும். இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அடுத்த செய்தி