ஆப்நகரம்

எம்.சி.ஏ. படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வுகள் இன்று நடைபெற்றது!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 20 May 2018, 11:52 am
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
Samayam Tamil examsentence
எம்.சி.ஏ. படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வுகள் இன்று நடைபெற்றது!


எம்.பி.ஏ, எம்.சி.ஏ , எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் போன்ற படிப்புகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகஙம் இந்தத் தேர்வை நடத்தி வருகிறது.

அந்தவகையில் இந்தாண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வை எழுத, தமிழகம் முழுவது 38 ஆயிரத்து 395 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி முதல்கட்டமாக நேற்று, எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வும், இன்று எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது.

டான்செட் தேர்வு முடிவுகள் ஜூன் 2-ஆம் வாரம் வெளியான பின்னர், தனித்தனியே கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி