ஆப்நகரம்

மாணவர்களுக்கு பாடநூல்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை : தமிழக அரசு

1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடநூல்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் ஜூன் 7ந்தேதி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

TNN 28 May 2017, 10:46 pm
சென்னை : 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடநூல்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் ஜூன் 7ந்தேதி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil textbooks available tn government
மாணவர்களுக்கு பாடநூல்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை : தமிழக அரசு



இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," விலையில்லா பாடநூல்கள், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு ஜூன் 7 அன்று பள்ளிகள் திறக்கும்போது பாடநூல்கள் உறுதியாக மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனைக்கான பாட நூல்களை கடந்த ஆண்டு முதல் இணைய தளம் மூலம் தனியார் பள்ளிகள் பதிவு செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணையதள முகவரி – https://www.textbookcorp.in. மாணவர்கள், பெற்றோர், தனித் தேர்வர்கள் இணையதளம் மூலமும், பொது சேவை மையங்கள் மூலமும் பாடநூல்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள இக்கழக 22 வட்டார கிடங்குகளிலும் மற்றும் சென்னையிலுள்ள பிரதான கிடங்கிலும் விற்பனைக்கான பாடநூல்கள் 100 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாடநூல் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி