ஆப்நகரம்

முதல் முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் முதல்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வை எழுதியுள்ளனர்.

Samayam Tamil 26 Nov 2018, 5:02 pm
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள்முதல்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வை எழுதியுள்ளனர்.
Samayam Tamil dc-Cover-652ovhkibhg82kh6on274ihkn1-20180127035308.Medi.


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம் மற்றும்என்.சி.இ.ஆர்.டி இணைந்துதேசிய அறிவியல் விழிப்புணர்வுதேர்வை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கஞ்சனூர் அரசுப்பள்ளி தேர்வு மையத்தில், மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். அவர்களுடன் சேர்ந்துமூன்று தனியார் பள்ளி மாணவர்களும் இத்தேர்வை எழுதினர்.

மேலும் அதே பள்ளியை சேர்ந்தஆறாம் வகுப்புமுதல்எட்டாம் வகுப்பு வரை பயிலும் 25 மாணவர்கள் முதன்முதலாக ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதினர். இதில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளன.

அடுத்த செய்தி