ஆப்நகரம்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

தரவரிசைப் பட்டியல் வெளியானவுடன் கலந்தாய்வு ஆரம்பமாகும் அதன்படி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 9ஆம் தேதி துவங்கும்.

Samayam Tamil 8 Jul 2019, 9:56 am
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
Samayam Tamil mbbs_from_china_3032408_835x547-m


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் சனிக்கிழமை வெளியானது. சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை வெளியிட்டார்.

தரவரிசைப் பட்டியல் வெளியானவுடன் கலந்தாய்வு ஆரம்பமாகும் அதன்படி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 9ஆம் தேதி துவங்கும்.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்களும் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் வந்தன.

தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 685 மதிப்பெண்கள் பெற்ற கே. ஷ்ருதி என்ற மாணவி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். 677 மதிப்பெண்கள் பெற்ற ஏ.கே. அஸ்வின் ராஜ் என்ற மாணவர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். தரவரிசையில் இடம்பெற்ற 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்த்தக்கது.

https://tnmedicalselection.net/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட முருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை டவுன்லோட் செய்யலாம். அல்லது பின்வரும் இணைப்புகளை பயன்படுத்தி நேரடியாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Provisional rank list for MBBS BDS 2019 2020 Session for Government QuotaProvisional rank list for MBBS BDS 2019 2020 Session for Management Quota

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வில், தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் 14,464 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது.

அடுத்த செய்தி