ஆப்நகரம்

தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் மருத்துவ கலாந்தாய்வு துவங்க வாய்ப்பு

தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNN 23 Jun 2017, 2:20 pm
சென்னை : தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil tn medical counseling may strats july 3rd week
தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் மருத்துவ கலாந்தாய்வு துவங்க வாய்ப்பு


மருத்துவ படிப்புக்களில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வானது, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான வினாத்தாளானது ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நடத்தப்பட்டன. நீட் தேர்வு முடிவுகளை ஜுன் மாதம் 8-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்யதிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பல நாட்கள் தாமததிற்குப் பிறகு நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3 வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் ஒருவாரத்தில் விநியோகம் செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் கலாந்தாய்வுக்கு பின்னரே தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்கப்படும். மேலும் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற பின்னரே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அடுத்த செய்தி