ஆப்நகரம்

RTE : கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 6 - 8 வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி!

கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 100% தேர்ச்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 10 May 2023, 12:30 pm
இந்தியா முழுவதும் கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 8 வகுப்பு வரை பயின்றுள்ள மாணவர்களுக்கு 100% தேர்ச்சி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல், 75% வருகைப்பதிவு, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 25 மதிப்பெண்கள், உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து மொத்தமாக 150 மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றால் தான் 9-ம் வகுப்பு தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil RTE ALL PASS


பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு.
நடப்பு கல்வியாண்டில் பயின்ற 6 - 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தேர்ச்சி சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்குதல் தொடர்பான அமர்வானது சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, தேர்ச்சி பதிவேடு மற்றும் தேர்ச்சி பதிவுத்தாள் தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு 22 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

அதில் முக்கியமான அறிவுறுத்தல்கள் பின்வருமாறு..
  • 6-8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க வேண்டும்.
  • 9ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்ச்சி வழங்க அரசு விதிகளின் படி குறைந்தது 75 % வருகைப்பதிவு இருக்க வேண்டும்.
  • மேலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்று, உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற வேண்டும்.
  • ஒவ்வொரு பாடத்திலும் 25 மதிப்பெண்ணுக்கு அதிகம் பெற்று, வருகை சதவீதம் 75 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மருத்துவ சான்றின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதலுடன் விதிகளுக்குட்பட்டு தேர்ச்சி வழங்கலாம் என்பது உள்ளிட்ட முக்கியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது..

அடுத்த செய்தி